Total Pageviews

Tuesday, July 24, 2018

திராவிட பித்தலாட்டம் - போலி ஆரிய எதிர்ப்பு

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த பதிவு 'ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்திற்கு' சம்பந்தம் இல்லை என்றாலும் கடந்த '50 வருடங்களாக' இந்த ஆன்மீக பூமியில் 'உண்மையில்' என்ன நடந்து இருக்கிறது என்பதை சொல்லவே இந்த பதிவு

நீண்ட நாட்களாக எழுத நினைத்த பதிவு.  வாருங்கள் பயணிக்கலாம்

'திராவிடம்' ஒரு நிலப்பரப்பை குறிக்கிறது என்றும் (அல்ல)  'திராவிடம்' தென்னிந்திய மொழிகளை குறிக்கிறது என்றும் நிறைய கருத்துக்கள் உள்ளன.

இவற்றை எல்லாம் தாண்டி 'திராவிடத்தை' பயன்படுத்தி 'தி க / தி மு க' 'உண்மையில்' என்ன செய்து இருக்கிறது என்று பார்க்கலாம்

'தி க' மற்றும் 'தி மு கவின்' கூற்றுப்படி


1)  பார்ப்பனர்கள் என்பவர்கள் 'ஆரியர்கள்'
2)  'தமிழர்கள்' (அல்லது) 'திராவிடர்கள்' ஆரியர்கள் அல்ல


தமிழ் மக்களை 'தனி தேசிய இனம்' என்று எடுத்து கொண்டாலும் (அல்லது) தமிழ் மக்களை 'திராவிட இனத்திற்குள்' அடக்கினாலும் 'பின்வரும் கேள்விகள்' மட்டும் எப்போதுமே தொக்கி நிற்கும்


கேள்விகள்
===========

தி.க / தி.மு.க 1912 முதல் இன்று வரை  'பார்ப்பனகளை எதிர்த்தது / எதிர்த்து வருவது' அனைவருக்கும் தெரிந்ததே

1)  நாங்கள் 'தமிழர்கள்' (அல்லது) 'திராவிடர்கள்'.  பார்ப்பனர்கள் ஆகிய நீங்கள் 'ஆரியர்கள்'.

ஆகவே உங்களுடைய 'வருணாசிரம'  சித்தாதங்கள், வரைமுறைகள் 'தமிழர்களான' எங்களுக்கு பொருந்தாது என்று தானே சொல்லி இருக்க வேண்டும் ?

ஆனால் அதை விடுத்து 'மனு தர்மத்தை' ஏன் எரிக்க வேண்டும் ?

2)  'தமிழ் இனத்தை' தனி தேசிய இனமாக கருதினால் கூட 'தமிழர்கள்'  ஆரியர்கள் கட்டுப்பாட்டில் வரமாட்டார்கள்

ஆரியர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்னும் போது 'தமிழ் இனத்திற்கு'  வருணாசிரமம் 'applicable' ஆகாதே.  அதாவது தமிழர்களில் 'பிராஹ்மணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள்'  என்று பிரிவுகள் இருக்க முடியாது

3)  'தமிழுக்க்கும்' - 'ஆரியத்துக்கும்'   சம்பந்தம் இல்லை என்னும் போது 'வருணாசிரமத்தை'  எதிர்த்து 'தி.க / தி.மு.க'  எதற்க்காக போராட வேண்டும் ?  எதற்காக 'மனு தர்மத்தை' எரிக்க வேண்டும் ?

                                                                    ( அல்லது )

'திராவிடத்திற்கும்' - 'ஆரியத்துக்கும்'   சம்பந்தம் இல்லை என்னும் போது 'வருணாசிரமத்தை'  எதிர்த்து 'தி.க / தி.மு.க'  எதற்க்காக போராட வேண்டும் ?    எதற்காக 'மனு தர்மத்தை' எரிக்க வேண்டும் ?

4)  இப்போதும் என்ன சொல்கிறார்கள் 'தை தான் தமிழ் புத்தாண்டு' ,  ஆரியர்களின் 'சித்திரையை' நாங்கள் ஏற்க மாட்டோம் என்று தானே சொல்கிறார்கள் ?

ஆரியர்களை ஒதுக்கி விட்ட பின்பு 'brahmanas, க்ஷத்ரியாஸ், soodhraas, வைசியாஸ்'  என்ற பிரிவுகள் (அல்லது) பாகுபாடுகள் எப்படி பொருந்தும் ?

5)  தி.க / தி.மு.க உண்மையிலேயே 'ஆரியர்களை' எதிர்த்து இருந்தால்  'பார்ப்பனனே வெளியேறு' என்று தான் முழக்கமிட்டு இருக்கவேண்டும் ?  (அல்லது)  'தமிழர்களுக்கு' சைவ மற்றும் வைணவ கோவில்களுக்கு செல்ல வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து இருக்க வேண்டும் ?

ஆனால் இதில் எதையுமே 'தி க மற்றும் தி மு க' செய்யவில்லை

தி.க வும் / தி மு க வும் 'ஒரு போதும்'  உண்மையான 'ஆரிய எதிர்ப்பை' முன்னெடுக்கவில்லை.  அவர்கள் செய்த தெல்லாம் 'பார்ப்பன துவேஷமன்றி' வேறு எதுவும் இல்லை

'தி க / தி மு க' செய்தது முழுக்க முழுக்க 'அரசியல் சுயலாபத்திற்கு' அன்றி வேறில்லை.  ஈ.வெ.ரா என்ற தனிமனிதனின் 'வெறுப்பின் காரணமாக' (அல்லது)  ஈ.வெ.ரா வை யாரும் கேள்வி கேட்காததால் வந்த வினை தான் இது

மேற்கேட்ட  கேள்விகள் மூலம் 'திராவிடத்தின்' போலியான, புரட்டுகள் நிறைந்த 'ஆரிய எதிர்ப்பு' வெளிப்படுகிறது

இதில் மாற்று கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்

நன்றி